×

பெரியகுளம் அருகே கெளமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா கோலாகலம்: பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

தேனி: பெரியகுளம் அருகே பிரசித்தி பெற்ற கெளமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கெளமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆனி திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு மாரியம்மனின் சக்தி கம்பத்திற்கு நீர் ஊற்றும் நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவரும் அம்மனுக்கு தண்ணீர் எடுத்து ஊற்றியும், அங்க பிரதசனம் செய்தும் வழிபட்டனர்.

9 நாட்கள் திருவிழா முடிந்த நிலையில் 10-ம் நாளான இன்று அதிகாலை அம்மனுக்கு தீச்சட்டி எடுத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனுக்கு நேரத்தி கடன் செலுத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றுகூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால் இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post பெரியகுளம் அருகே கெளமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா கோலாகலம்: பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Kelamariamman Temple ,Anithiruviya Kolagalam ,Periyakulam ,Theni ,Kelamariamman ,temple ,Vijala ,Kolagalam ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...